->
இந்த பகுதியில் சில குறிப்பிட பயிர்களை எவ்வாறு பயிரிட்டு அதிக இலாபம் காண்பது என்று வேளாண்துறை ஆய்வாளர்களின் கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விதை நேர்த்தி மற்றும் பயிரிடுதல்:
நமது பாரம்பரிய விதை மேலாண்மை என்பது கிட்டத்தட்ட காணாமல் போய்விடும் நிலையில் உள்ளது. அத்தகு நிலையிலும் விவசாயிகள் விதை உற்பத்தி செய்தல் வேண்டும் என்று அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
விவசாயிகள் ஆண்டுதோறும் நெல் விதைக்காக வேளாண் துறை அல்லது தனியார் நிறுவனங்களை எதிர்ப்பார்ப்பதை விட, வேளாண் துறையில் ஒரு முறை மட்டும் ஆதார விதைகளைப் பெற்று, தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தாங்களே தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து கொள்ளலாம்.
மேலும், மண் பரிசோதனை செய்து, உயர் தர உரங்களைப் பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொண்டால், நிச்சயமாக கூடுதல் லாபம் கிடைக்கும்.
இதேபோல, உளுந்து, பயறு வகை விதை உற்பத்திக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றில் வழங்கப்படும் மானியத்தின் மூலமும் விவசாயிகள் நல்ல பயன் பெற முடியும்.
எனவே, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பயறு வகைப் பயிர்களையும் சாகுபடி செய்ய முன் வர வேண்டும்.
தினமணி தகவல்.
வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் பி. பார்த்தசாரதி.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய புயல் காற்றில் நெல் விதைப் பண்ணை வயல்களில் பயிர்கள் சாயந்ததாலும், நெல் மணிகள் ஒன்றோடொன்று உராய்ந்ததாலும் மணிகளின் நிறம் பழுப்பாகிக் காணப்படுகிறது.
வயல்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சாய்ந்திருந்தால் விதை நெல்லுக்கு ஏற்றுக் கொள்ள இயலாது. சம்ப பருவத்தில் 600 ஹெக்டேரில் நெல் விதைப் பண்ணைகள் அமைத்து சான்று விதை பெற்றிட பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இப்பருவத்தில் சம்பா மசூரி, அம்பை 16, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, கோ 43, கோ (ஆர்) 50, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி மற்றும் நீண்டகால ரகமான சாவித்திரி ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
விதை தரத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள்:
வயல்களில் 2 அங்குல உயரத்துக்குக் குறைவாகத் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன் தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட வேணடும். நெல் கதிர்களில் 90 சதம் மணிகள் வைக்கோலின் நிறத்தில் இருந்தால் அது அறுவடைக்கு ஏற்ற தருணம்.
தக்க தருணத்துக்கு முன்னரே அறுவடை செய்து உலர வைக்கும் போது, விதைகள் சுருங்கி சிறுத்து விடுவதுடன் முளைப்புத் திறனும் குறைந்து விடும்.
காலம் கடந்து அறுவடை செய்தால் விதைகளின் நிறம் பனி விழுந்து மங்கி விடுவதுடன் பூஞ்சாணங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகும். புயல் பாதித்த கதிரில் மகரந்தச் சேர்க்கை பாதிப்பால் பதர் அதிகமாக இருக்கும்.
எனவே அறுவடை செய்த குவியல்களை இயந்திரத்தினாலோ, பணியாளர்களைக் கொண்டோ பதர் முழுவதும் போகும் அளவுக்குத் தூற்றி சுத்தம் செய்ய வேண்டும். பிரித்து எடுத்த விதைகளை சில நாள்கள் குவித்து வைத்தால், விதைகள் சூடேறி, முளைப்புத்திறன் குறையும். எனவே பிரித்தெடுத்த விதைகளை உடனே உலர வைக்க வேண்டும்.
கதிர் அறுவடை செய்யும் இயந்திரங்களை ஒரு ரகத்துக்கு பயன்படுத்தி விட்டு, வேறு ரகத்துக்கு மாற்றும் போது, இயந்திரங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் மற்ற ரகக் கலப்பினால் விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும்.
விதை நெல்லின் ஈரப்பதம் 13 சதம் இருக்குமாறு காயவைத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கோணிப்பைகளில் நிரப்பி அனுப்ப வேண்டும். விதை மூட்டைகளை மரக்கட்டை அட்டகம் அல்லது, தார்ப்பாய்களின் மீது அடுக்கி வைக்க வேண்டும்.
வெறும் தரை அல்லது சுவர் மீது சாய்த்து அடுக்கினால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கும். விதை நெல் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடித்து தரமான விதை நெல்லை உற்பத்தி செய்யலாம்.
தினமணி செய்தி
விதைச்சான்று உதவி இயக்குநர் ஹரிதாஸ். கடலூர் மாவட்ட வேளாண்
துறை
பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வேதியியல் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும், நிலமும் விஷத்தன்மை மற்றும் மாசு அடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதிக லாபம் மற்றும் மகசூல் பெறவும் இயற்கை விதை நேர்த்தி செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இயற்கை விதை நேர்த்தி முறை:
விவசாயிகள் தங்களின் விதைகளை இயற்கை முறையில் தயார் செய்யப்படும் ஆட்டூட்டக்கரைசல் (ஆட்டுப்புழுக்கை, ஆட்டு சிறுநீர், ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர், வாழைப்பழம், இளநீர், கடலைப் பிண்ணாக்கு, கரும்புச்சாறு மற்றும் கள் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் கலவை) அல்லது பஞ்சகவ்யா கலவையை (சாணம், மாட்டு சிறுநீர், பால், தயிர், நாட்டுச்சர்க்கரை, வாழைப்பழம், கரும்புச்சாறு, கள், ஈஸ்ட் மற்றும் கடலைப் பிண்ணாக்கு) 300 மில்லி கிராம் என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம்.
நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.
இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைகளை நிழலில் நன்றாக உலர்த்திய பின்பே விதைக்க வேண்டும். இவ்வாறு இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதால் நாற்றுகள் நன்றாக வாளிப்பாக வளரும். அதிக எண்ணிக்கையில் வேர் பிடிப்பு காணப்படும். பயிர்கள் நன்றாக வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை பெறும், பூச்சிகள், நோய் தாக்குதல்கள் இருக்காது.
அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை பஞ்சகவ்யா அல்லது ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நிழலில் காய வைத்து விவசாயிகள் எளிதாக சேமிக்கலாம். இதன் வாயிலாக விதைகளை பூச்சிகளும், நோயும் தாக்காது. முனைப்புத் திறனும் அடுத்த பருவத்திலும் குறையாமல் பாதுகாக்கப்படும்.
பிற பயன்கள்:
நெல், தக்காளி நாற்றுகளை, வாழைக் கன்றுகளை பஞ்சகவ்யா மற்றும் ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நடவு செய்யும் போது பூஞ்சானம், வைரஸ் மற்றும் வேர் புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். குறைந்த செலவில் விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை வேளாண் பொருள்களை கொண்டு செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும்.
மேலும் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற முடியும். எனவே தமிழக விவசாயிகள் இயற்கை விதை நேர்த்தி வாயிலாக அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவின் தெரிவித்துள்ளார்.
தகவல் – தினமணி.
ஒரு செண்ட் நிலத்தில் நடவு செய்வதற்குத் தேவையான நாற்றை உற்பத்தி செய்ய 9 அடி நீளம் 3 அடி அகலம் உள்ள இடமும் 150 கிராம் விதை நெல்லும் போதும். நிலத்தில் தண்ணீர் விட்டு மண்ணை சேறாக மாற்றிக் கொள்ள வேண்டும். 120 மில்லி தண்ணீர் 30 மில்லி மாட்டுச் சிறுநீர் இரண்டும் கலந்த கரைசலில் 150 கிராம் விதை நெல்லை ஊறவைத்து எடுத்து மூன்றாம் கொம்பு வைக்கவேண்டும். முளை விட்டுள்ள இந்த விதைகளைக் கொண்டு நாற்றங்காலில் தெளிக்க வேண்டும் பிறகு ரகத்தின் வயதைப் பொறுத்து 14 முதல் 18 நாள் வயதுடைய நாற்றைப் பறித்து நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்வதற்குத் தேவையான நிலம் தயாரிப்பு, இடுபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களைத் தனித்தனியாக ஒவ்வொரு செண்ட் நிலத்துக்காகவும் கணக்கில் எடுத்துக் கொள்வது சற்று சிரமமானதாக இருக்கும் என்பதால் இங்கே ஒரு ஏக்கர் நிலத்தைக் கணக்கில் கொண்டே அளவுகள் அனைத்தும் தரப்படுகின்றன.
ஒரு ஏக்கர் நிலத்துக்கு 5 டன் தொழுஉரத்தைக் கொட்டி களைத்துவிட்டு பின்னர் களைகள் இல்லாமல் நன்றாக உழவு செய்து சேறாக மாற்றிக்கொள்ளவேண்டும். நிலத்தில் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு செண்ட் அளவிற்குப் பிரித்து, சிறிய வரப்பு அமைத்துக் கொண்டு, மார்க்கர் குறியீட்டுக் கருவியை உருட்டி குறியிடப்பட்ட இடத்தில் குத்துக்கு ஒரு நாற்று வீதம் (ஒற்றை நாற்று நடவு முறை) நடவு செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 24 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 10 கிலோ கடலைப் புண்ணாக்கு, 10 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரமாக இடவேண்டும். அதிக உயரம் வளரும் ரகமாக இருப்பின் கடலைப் புண்ணாக்கைப் பாதியாகக் குறைத்துக் கொள்ளவும்
பூச்சியை விரட்டும் புண்ணாக்குக் கரைசல்
ரோட்டரி வீடர் கருவி கொண்டு 9, 18 மற்றும் 24ஆம் நாளில் களை
எடுக்கவேண்டும். 14 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர்
ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரோடு கலந்து விடவேண்டும். 35ஆம் நாளில்
தேவைப்பட்டால் ஏற்கனவே கொடுத்த அளவில் புண்ணாக்குகளைக் கொடுக்கலாம்.
கதிர் வருவதற்கு முன்பு 6 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு 6 கிலோ புங்கம்
புண்ணாக்கு இரண்டையும் 12 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும்.
பூச்சித் தாக்குதலைக்குறைப்பதற்கு 14 நாட்களுக்கு ஒரு தடவை வேப்பம்
புண்ணாக்கு கரைசலைத் தெளிக்க வேண்டும். 100லிட்டர் தண்ணீரில் 5 கிலோ
வேப்பம் புண்ணாக்கை 24 மணிநேரம் ஊறவைத்தால் புண்ணாக்கு கரைசல் தயார்.
ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் அளவுள்ள ஒரு டேங்கில் எட்டு லிட்டர்
வேப்பம் புண்ணாக்கு கரைசல் மற்றும் 2 லிட்ட்ர் மாட்டுச் சிறுநீர்
இரண்டையும் ஊற்றிக் கலந்து தெளிக்க வேண்டும்.
இந்த முறையில் சாகுபடி செய்யும்போது தூருக்கு 85 சிம்புகளும் சிம்புக்கு 250 முதல் 400 நெல்மணிகளும் இருக்கும். கதிர் பழுத்த பிறகு கடைசி இரண்டு வாரம் தண்ணீர் இல்லாமல் நிலத்தைக் காயப் போடவேண்டும். உப்புத் தன்மையுள்ள நிலததில் ஒற்றை நாற்று நடவு முறை மேற்கொண்டால் 14 நாட்கள் முன்னதாகவே அறுவடை செய்யலாம்.
அறுவடை செய்த நெல் ரகங்களைத் தனியாகக் காயவைக்க வேண்டும். வேப்பம்புண்ணாக்குக் கரைசலில் முக்கி எடுத்து உலர வைத்த சணல் சாக்கில் இந்த நெல்லைச் சேமித்து வைக்கவேண்டும்.
இதன்படி செய்தால் ஒரு செண்ட் நிலத்தில் 27 முதல் 32 கிலோ வரைக்கும் நெல் மகசூலா கிடைக்கும். ஒரு ஏக்கருக்குக் கணக்குப் போட்டா 60 கிலோ மூட்டையில் குறைந்த பட்சம் 45 மூட்டை வரைக்கும் கிடைக்கும்
நன்றி – பசுமை விகடன் கட்டுரை
ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் வேப்பங்கொட்டை சாறு 5 சதக் கரைசலைத் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் அல்லது பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 600 மி.லி./ ஹெக்டர் (அ) புரோபனோபாஸ் 50 இ.சி. 1,000 மி.லி./ ஹெக்டர் மருந்தினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
நெல்லில் இளைப்புள்ளி நோய் தாக்குதல் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மேங்கோசெப் 2.0 கிராம்/ லிட்டர் (அ) எடிபென்பாஸ் 1 மி.லி./ லிட்டர் என்ற முறையில் கலந்து 2 அல்லது 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில் நோய் தாக்குதலுக்கு ஏற்பட தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்களின் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1.25 கிராம்/ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் கடலோர மாவட்டங்களில் நெற்பயிரை குலை நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனைக் கட்டுப்படுத்த 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில்) டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாள்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் (அ) இமிடோகுளோபிரிட் 200 எஸ்.எல். என்ற மருந்தினை 100 மி.லி./ ஹெக்டர் (அ) மெத்தில் டெமட்டான் 25 இ.சி. 500 மி.லி./ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். காய்ப்புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கட்டுப்படுத்தவும்.
சிவகங்கை தஞ்சாவூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டுத்துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராம்மா முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி. என்ற அளவில் வெளியிடவும்.
செவ்வழுகல் நோய் தாக்குதல் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கரும்புக் கரணைகளை 0.1 சதவீதம் கார்பன்டெசிம் (அ) 0.05 சதவீதம் டிரைட்மெபன் என்ற கரைசலில் 15 நிமிடம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும், தேவைப்படின் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் தயாரித்து தெளிக்கவும்.
தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இலைப்புள்ளி நோய் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கார்பன்டெசிம் 0.1 சதவீதக் கரைசல் (அ) மேங்கோசெப் (0.2) சதவீத கரைசல் (அ) குளோரேதலானில் (0.2) சதவீத கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மரவள்ளி, பப்பாளி, மல்பெரி பயிரிடும் விவசாயிகள் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கண்காணிக்கவும். இவற்றைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகி ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று மாவுப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு
பேராசிரியர் மற்றும்
தலைவர்,
வேளாண்
பூச்சியியல் துறை,
தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை-641003.
தொலைபேசி: 0422-6611214.
பேராசிரியர் மற்றும்
தலைவர்,
பயிர்
நோயியல் துறை,
தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை –
641003. தொலைபேசி: 0422-6611226.
தமிழகத்தில் நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடையில் பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக நடத்திய பூச்சி, நோய் ஆய்வின்படி டிசம்பர் மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் வெளியிடப்படுகிறது.
நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் பரவலாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதம் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் மற்றும் விளக்கு பொறி வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். அந்துப் பூச்சி அதிகமாக காணப்பட்டால் – டிரைகோகிராம்மா ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் வயலில் விடவும்.
இலை சுருட்டு
பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் ரசாயன பூச்சிக் கொல்லி குளோர்பைரிபாஸ் 2.5 மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு (அ) பிரப்பனோபாஸ் 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்றளவில் கலந்து தெளிக்கவும். நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய் திருவாரூர் மாவட்டத்தில் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த 2.5 கிராம் காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருத்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கவும். கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடர்ந்து மழை பெய்ததாலும் தட்பவெட்ப நிலை சாதகமாக இருந்ததாலும் நெற்பயிரினில் நெல்குலை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில் டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாட்கள் இடை வெளியில் தெளிக்கவும்.
சாறு உறிஞ்சும் பூச்சி
தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும். காய் புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து கட்டுப்படுத்தவும்.
சிவகங்கை, தஞ்சை, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டு துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுபடுத்த டிரைக்கோகிராம்மா என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சிசி என்ற அளவில் வெளியிட்டுக் கட்டுப்படுத்தவும்.
நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும். தேவைப்பட்டால் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் தெளித்துக் கட்டுப்படுத்தவும்.
மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி ஆகிய பயிர்களில் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலைகளைத் தொடர்பு கொண்டு ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று அவற்றை பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் விட்டு கட்டுப்படுத்தவும்.
மேலும், விவரங்களுக்கு
பேராசிரியர் மற்றும்
தலைவர்,
வேளாண்
பூச்சியியல் துறை,
தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641
003.
தொலைபேசி
0422-6611214.
பேராசிரியர் மற்றும்
தலைவர்,
பயிர்
நோயியல் துறை,
தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641
003.
தொலைபேசி
0422- 6611226 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சப்போட்டா, நிலக்கடலை, நெல், பப்பாளி, பருத்தி, பூச்சி தடுப்பு
தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மகிழ்ச்சியான செய்தியே. என்றாலும் என்றாலும் மழைபெய்வதற்கு முன்னரே பயிரிட்ட பயிர்களைப் பாதுகாக்கவேண்டிய தருணம் இது. தேங்கிய நீரில் அழுகி வீணாகிவிடலாம். பூச்சிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம். சில சமயங்களில் நீரை வயலிலேயே தேக்கி வைத்தால் பாசனம் செய்வது எளிது. எனவே, மழைக் கால யோசனைகளை வழங்கி சில செய்திகள் வெளியாகி உள்ளன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளோம்.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அனைத்துப் பயிர்களின் வயல்களிலும் மழை நீர்த் தேங்கிக் காணப்படுகிறது. இதனால், பாக்டீரியம், பூஞ்சாணம் போன்றவற்றால் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக, பருத்தியில் வெர்டிசீலியம் வாடல் நோய், வேர் அழுகல் நோய், ஆல்டர் நேரியா, இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய், புகையிலைக் கீற்று வைரஸ் நோய் ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
பருத்தி
மேலும், செடிகளிலுள்ள சப்பைகள், காய்கள் அழுகி உதிர வாய்ப்புள்ளது. பருத்தி வயல்களில் தேங்கியுள்ள மழை நீரால், மெக்னீசியம் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு, பருத்தி இழையின் ஓரங்கள் சிவப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பருத்தியை மழை நீரிலிருந்து பாதுகாக்க, வயல்களில் தேங்கும் நீரை, ஐந்து பாத்திகளுக்கு இடையே பார் அமைத்து, வயலைச் சுற்றி வடிகால் வசதி செய்து தேங்கிய நீரை வெளியேற்ற வேண்டும்.
பருத்திச் செடிகளில் வேர் அழுகல் நோய் காணப்படும் போது, சூடோமோனாஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி உள்ளிட்ட எதிர் உயிர்க் கொல்லிகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் அல்லது மேன்கோசெப் பூஞ்சாணக் கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடை லிட்டருக்கு 2 கிராமுடன், பாக்டீரியா கொல்லியான ஸ்டிரெப்டோமைசின் சல்பேட்டை பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து, செடிக்குச் செடி வேர் பகுதிகளில் ஊற்றுவதன் மூலம், வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பருத்தி இலைகளில் இலைப்புள்ளிகள் தென்படும் போது, காப்பர் ஆக்ஸிகுளோரைடு 30 கிராம், ஸ்டிரெப்டோமைசின் சல்பேட் ஒரு கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, 10-15 நாள்கள் இடைவெளியில் இலையின் மீது தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மேலும், மழை நின்ற பிறகு, செடிகள், சப்பைகள் நன்கு செழிப்புடன் இருக்க, வளர்ச்சி ஊக்கி அல்லது டி.ஏ.பி. 2 சதக் கரைசலைத் தெளிக்க வேண்டும். பருத்தியில் இலைகள் சிவப்பாக தென்படும் போது, மெக்னீசியம் சல்பேட் 100 கிராம், ஜிங் சல்பேட் 50 கிராம், யூரியா 10 கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் மழையிலிருந்து பருத்தியைக் காப்பாற்றி அதிக மகசூலைப் பெறலாம். தற்போது சிறிய வெங்காயப் பயிரைக் குமிழ் அழுகல் நோய் அதிகமாகத் தாக்கியுள்ளது. இந்த நோயானது பூஞ்சை மூலம் பரவுகிறது. இந்தப் பூஞ்சையைக் கட்டுப்படுத்த, குளோரோதலோனில் பூஞ்சாணக் கொல்லியை லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் அல்லது மாங்கோசெம் பூஞ்சாணக் கொல்லியை 2.5 கிராம் என்ற அளவில் கலந்து, அதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.
மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய் காணப்படும் போது, புரபிகோனோசால் 20 மில்லி அல்லது சூடோமைல் 20 கிராம் அல்லது பெவிஸ்டின் 20 கிராம் அல்லது அலைட் 20 கிராம் இதில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் 5 மி.லி. ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மக்காச்சோளம், நெல், மஞ்சள், கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டுள்ள வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை, தகுந்த வடிகால் வசதி செய்து வெளியேற்றினால், பயிர்களைக் காப்பாற்றலாம்.
கூடுதல் விவரங்களுக்கு,
ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், பெரம்பலூர். தொலைபேசி எண் 04328-293251, 293592
தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும், அதிக நாற்றுகள் உள்ள குத்துகளிலிருந்து சில நாற்றுகளை எடுத்து, நாற்றுகள் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும். அதே ரக நாற்றுகள் கிடைத்தால் போக்கிடங்களில் நடவு செய்யலாம்.
தண்ணீரில் மூழ்கியுள்ள நெல் பயிருக்கு உடனடியாக 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவும், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டும் கலந்து கைத் தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
தண்ணீர் வடிந்து விட்ட நிலையில், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள நெல் பயிருக்கு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஒரு நாள் வைத்திருந்து பிறகு 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும். இந்த உரங்களை இடும்போது வயலில் சீராக தண்ணீர் வைத்துக் கொண்டும், தண்ணீர் வெளியே விடாதவாறும் பராமரிக்க வேண்டும். சூல் கட்டும் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தெளிவான கரைசலை வடிகட்ட வேண்டும்.
அத்துடன், ஒரு கிலோ யூரியா, ஒரு கிலோ பொட்டாஷ் உரங்களை கலந்து 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதேபோல, ஊட்டச்சத்து மேலாண்மை மேற்கொண்டால் மழை நீரால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்றலாம்
தினமணி தகவல்
பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் பிபிடி 5204 (ஆந்திரப்பொன்னி) கலப்புடன் கொடுக்கப்பட்ட விதையில் நட்டம் அடைந்துள்ளதாக சமீபத்திய நாளேடுகள் பிரசுரித்திருந்தன. கவனத்திற்கு!
திருவள்ளூர் அருகே உயர்ரக நெல் விதையான பிபிடி 5204 விதைத்த விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்படும் என கவலை அடைந்துள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேளகாபுரம், எஸ்ஆர் கண்டிகை, மாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளான பாஸ்கர், சுரேஷ், பாண்டியன், தியாகராஜன், குணா, கஜேந்திரன், ராமதாஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 250 ஏக்கரில் நெல் பயிர் விதைத்துள்ளனர்.
எஸ்ஆர் கண்டிகையில் கலப்பின நெல் விளைச்சலைப் பார்வையிடும் திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் பானுமதி.
இவர்கள் அனைவரும் பிபிடி 5204 என்ற உயர் ரக விதை நெல்லை விதைத்துள்ளனர். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை அறுவடை செய்து சுமார் 30 ஆயிரம் வரை விற்பனை செய்வது வழக்கம்.
இவர்கள் ஆந்திர மாநிலத்தில் உற்பத்தி செய்து, அங்கு அரசிடம் தரச்சான்று பெற்று விற்பனை செய்யும் ராசி விதை நிறுவனத்தில் இருந்து சென்னை விதை நிறுவனம் என்ற மொத்த விற்பனையாளர் மூலம் ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு ஏஜென்சியில் நெல்லை வாங்கியுள்ளனர்.
இந்த ரகம் நடவு செய்து 140 நாள்களில் முற்றிய கதிராக அறுவடைக்கு தயாராகும். இந்நிலையில் மேற்கண்ட விவசாயிகள் வாங்கிய விதை நெல்லில் சன்னரக கலப்பு விதை இருந்ததால் 55 நாளில் கலப்பு விதைகள் முற்றிய நெல்லாக வளர்ந்துள்ளது.
இதில் வேதனை என்னவென்றால் உயர்ரக நெல்லான பிபிடி 5204 என்ற கதிர் 30 சதவீதம் மட்டுமே விளைந்துள்ளது.
மீதமுள்ள 70 சதவீதம் மட்டரக நெல் முற்றிய நிலையில் விளைந்துள்ளது. தற்போது விளைந்துள்ள ரகம் ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் மட்டுமே விலை போகும் என விவசாயிகள் கூறுகின்றனர். இதில் மேலும் ஒரு சரிவு என்னவென்றால் சன்னரகத்தை அறுவடை செய்தால் 30 சதவீதம் விளைந்துள்ள உயர்ரக நெல் நஷ்டமாகும். உயர்ரக நெல்லுக்காக காத்திருந்தால் தற்போது விளைந்துள்ள 70 சதவீத சன்னரக நெல்லும் நாசமாகும் நிலை உள்ளது.
இதையடுத்து விவசாயிகள் முறையிட்டதன் பேரில் திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பானுமதி மற்றும் அலுவலர்களும், நெல் விதையை விற்பனை செய்த நிறுவனத்தின் அலுவலர்களும் வந்து நெற்பயிரை பார்வையிட்டனர். பரிசோதனைக்காக விளைந்த நெல்லையும் எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியரை கேட்டபோது நாங்கள் இதுகுறித்து பரிசோதனை செய்த பின்னர் அறிக்கையை வெளியிடுவோம் என்றார். விதை நெல் விற்பனை செய்த அலுவலர்களிடம் கேட்டபோது இதே விதை நெல் கடலூரில் டன் கணக்கில் விற்பனை செய்துள்ளோம். ஆனால் அங்கு எவ்வித பிரச்னையும் எழவில்லை. தற்போது ஆராய்ச்சி நிலைய அறிக்கைக்கு பின்னரே எதுவும் கூறமுடியும் என்றனர். இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
தினமணி
மற்றும் தினமலர் இந் த செய்தியைப் பிரசுரித்துள்ளன.
இயற்கை வழி விவசாயத்திற்கு பசுமை விகடன் இதழ் எப்பொழுதும் ஆதரவு சந்து வருகிறது. ஆனால் அதில் வரும் சில ஆர்வமூட்டும் விசியங்களை வலைப்பதிவில் பகிர முடிவதில்லை. காரணம் காப்பிரைட். விவசாயத்திற்கு ஆதரவளிக்கும் இதழ் அதன் விவரங்களையும் கட்டற்ற முறையில் தந்தால் பயனுள்ளதாகவும் தொகுக்க எளிதாகவும் இருக்கும்.
இந்த வாரம் இயற்கை வழி நெல் சாகுபடி தொடர்பாக ஒரு கட்டுரை வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பொற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் அனுபவக்கதை. அதன் சாரம் வருமாறு.
பிழைப்பிற்காக நகரத்திற்குச் சென்று கல்வியுடன் அச்சுத் தொழிலில் ஈடுபட்டவர் இயற்கை வழிவிவசாயம் கேள்விப்பட்டு கிராமத்துக்குத் திரும்பியிருக்கிறார். ஏற்கனவே குத்தகைக்கு விட்ட தன் நிலத்தின் ஒரு பகுதியை வாங்கி இயற்கை வழி சோதனையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதன் பின்னர் ஆர்வம் ஊற்றெடுக்கத் தொடங்கியதும் கிராமத்துல் இருக்குற ஏழு விவசாயிகளை அழைத்து வந்து, ‘குக்கூ’ மூலம் இயற்கை வழி விவசாயப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்களையும் தயாரித்து தன் வயலில் பயன்படுத்தி இருக்கிறார் ஒரு மண்புழுகூட தட்டுப்படாத அவர் நிலத்தில் இப்போ ஏகப்பட்ட மண்புழுக்கள்.
நெல்லை நெல்லா விற்காமல் அரிசியாக அரைத்து விற்பதன் மூலம் மதிப்புக் கூட்டுதலையும் செய்திருக்கிறார்.
70 சென்ட்டுக்கு 25 கிலோ விதைநெல்!
‘ஒவ்வொரு நெல் ரகத்துக்கும் வயதுதான் வித்தியாசப்படுமே தவிர, சாகுபடி முறைகள் ஒன்றுதான். பவானி பொன்னி ரகத்துக்கு வயது 135 நாட்கள்; ஆடுதுறை-36 ரகத்துக்கு வயது 115 நாட்கள். இந்த ரகங்கள் அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வரும். அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றவை. 70 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்வதற்கு மொத்தம் 25 கிலோ விதைநெல் தேவைப்படும் (இவர் 45 சென்ட் நிலத்துக்கு பவானி பொன்னி ரகத்தில் 15 கிலோ விதையையும், 25 சென்ட் நிலத்துக்கு ஆடுதுறை-36 ரகத்தில் 10 கிலோ விதையையும் பயன்படுத்தியுள்ளார்).
2 சென்டில் நாற்றங்கால்!
நாற்றங்கால் தயாரிக்க,2 சென்ட் நிலத்தில் களைகளை அகற்றி, மூன்று சால் மினி டிராக்டரில் உழவு செய்து சேறாக மாற்றி சமப்படுத்த வேண்டும். பிறகு, 2 கிலோ கனஜீவாமிர்தம், 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை கலந்து தூவ வேண்ட
I am a text block. Click on me to drag me around or click a corner handle to resize me. Click the settings icon (it's the left one, looks like a cog) to change this text. You can type new text into me or cut and paste text from somewhere else. Click outside of me when you're done and any changes will be saved.
Copyright © vellalorenadu. All Rights Reserved.